இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு (CIABOC) 2019 டிசம்பர் 09 ஆம் தினத்தின் உதயம் மற்றைய நாட்களை போன்றதல்ல. அது விழுமியப்பண்புகள்; மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கொண்டதோர் கலாசாரத்தை உறுதி செய்வதில் ஆணைக்குழுவின் ஆற்றல், நம்பிக்கை மற்றும் செயல்பாடுகள் அனைத்து நிரம்பியதோர் நாள். CIABOC ஆல் டிசம்பர் 9, 2019 அன்று மு.ப 6.00 மணி முதல் பரந்த அளவிலான பொது மக்களுக்கான வெளியீட்டு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் இரவு 7.00 மணி வரை இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதில் அரசினதும் மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பொறுப்பை நிலைநிறுத்துவதே பிரச்சாரத்தின் பிரதான இலக்காக இருந்தது. இந்த பிரச்சாரம் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயல் திட்டத்தின் மூலோபாயம் B இன் அடிப்படையில் அமைந்திருந்தது. மூலோபாயம் பி- 'மதிப்பு அடிப்படையிலான கல்வி மற்றும் சமூக ஈடுபாடு' - நெறிமுறை மதிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சமூக ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதனை நோக்காக கொண்டது. CIABOC இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளில் மட்டுமல்லாமல், தடுப்பு நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களிடத்தில் ஒரு கருத்தியல் ரீதியான மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதே ஆணைக்குழுவின் ஆயிரம் மைல்களை நோக்கிய ஊழல் எதிர்ப்பு பயணத்தின் ஆரம்ப படியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.