ரத்தொலுகமவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி, ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள், 14.07.2025 அன்று மாலை 7.05 மணியளவில் ரத்தொலுகம, வெத்தேவ சந்தியில், போக்குவரத்துக் குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் சாரதி அனுமதிப்பத்திரத்தை திருப்பித் தர ரூபா 3000/= (மூவாயிரம் ரூபா) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.








