- சியம்பலாண்டுவவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, சியம்பலாண்டுவ, பரவாய கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் ஒருவர், முறைப்பாட்டாளர் வாங்கிய 18 தேக்கு மரங்களை வெட்டுவதற்கான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவதற்கும், கிராம அலுவலர் நிலத்தை ஆய்வு செய்த பிறகு வழங்க வேண்டிய மரத்தை அகற்றுதல் குறித்த அறிக்கையை வழங்குவதற்கும் ரூ.23,000/= மதிப்புள்ள ஒரு சிறிய மெலமைன் இரண்டு கதவு அலமாரியை முறைப்பாட்டாளரிடமிருந்து கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய தொகையை கடைக்கு செலுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் கேட்கப்பட்டது, மேலும் பற்றுச்சீட்டு இலஞ்சமாகப் பெறப்பட்டது, மேலும் முறைப்பாட்டாளரிடம் மரம் வளர்ப்பு குறித்த அறிக்கையை முறைப்பாட்டாளருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டார்.
- பொல்கஹவெலவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்துஇ குருநாகல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியல் அலுவலகத்தில் பணிபுரியும் தரம் 1 எழுதுனர்இ முறைப்பாட்டாளருக்குச் சொந்தமான பொல்கஹவெல-கேகல்ல பிரதான சாலையில் 01 கி.மீ கல்லிற்கும் 02 கி.மீ. கல்லிற்கும் இடையில் அமைந்துள்ள நிலத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானமாக அறிவிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை இடித்துஇ அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை முறைப்பாட்டாளரிடம் திருப்பித் கையளிப்பதற்காவும் சட்ட நடவடிக்கை எடுக்காததிருப்பதற்காகவும் ரூ. 150,000/= இலஞ்சம் கோரி அதனை 120,000.00 ஆக குறைத்து பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.








