உள்ளூர் மருந்து உற்பத்தி நிறுவனத்தை ஆய்வு செய்வதற்கும், இயந்திரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கஞ்சா அரைத்ததாகவும், அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் இலஞ்சமாக ரூபா 2,000,000/- (ரூபா 20 இலட்சம்) இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மது வரி திணைக்கள சார்ஜன்ட் ஒருவர் 10.12.2025 அன்று காலை 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








