ஜா-எல தாதுகம பகுதியைச் சேர்ந்த ஒரு வியபாரி அளித்த முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளர் வேறொரு நபரால் திருடப்பட்ட தங்கப் பொருட்களை வாங்கியமைக்கும் திருடப்பட்ட பொருட்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருக்க. குற்றஞ்சாட்டப்பட்டவர் ரூபா. 300,000/= மற்றும் ஒரு பவுண்டு தங்கத்தை இலஞ்சமாக கோரியுள்ளார், கம்பஹா தலைமையக காவல் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கம்பஹா தக்ஷசீல மகா வித்தியாலயத்திற்கு எதிரே உள்ள சாலையில் 2025.12.25 அன்று பிற்பகல் 03.10 மணியளவில் கோரப்பட்ட தொகையில் ரூபா 250,000/= இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








