கிண்ணியாவில் ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி முறைப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக வேறொ நபர் மூலம் ரூபா 10,000/= இலஞ்சம் கேட்டு, அந்தத் தொகையை பெற்றுக் கொண்டமைக்காக கிண்ணியா பொலிஸ்; நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் நானாவித முறைப்பாடுகள் பிரிவில் வைத்து 31.12.2025 அன்று மாலை 5.20 மணியளவில் கைது செய்யப்பட்டார்.








