முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் ஒருவரும்> முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஒருவரும்> ரூபா 30,000/= (முப்பதாயிரம் ரூபாய்) இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி> முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்;; கணக்காளரான சண்முகராச பிரதீபன் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான காசிப்பிள்ளை காந்தீபன் ஆகியோர்> முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்;;; படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்வதற்காக முறைப்பாட்டாளர் பெற்ற ஒப்பந்தம் தொடர்பான மார்ச் மாதக் கட்டணத்திற்கான காசோலையை விடுவிப்பதற்காக> ரூபா 30,000/= (முப்பதாயிரம் ரூபாய்) இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில்> 18.04.2026 அன்று காலை முறையே 11.10 மணி மற்றும் 11.05 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கணக்குப் பிரிவில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search