மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) விசாரணை அதிகாரிகளால் 06.08.2025 அன்று கைது செய்யப்பட்டார்.
சேதங்களுக்கான இழப்பீட்டு அலுவலகத்தில் உள்ள சில அரசு அதிகாரிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கு சார்பாக செயற்பட வலியுறுத்தி இழப்பீடு பெறல், ஊழல் குற்றத்தைச் செய்தல் மற்றும் அவ்வாறு செய்ய சதி செய்தல், அத்துடன் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். குறித்த சொத்து மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் 1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார்.








