2024 ஆம் ஆண்டில், ஒரு கைதி உடல்நிலை பலவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ளக நோயாளியாக சிகிச்சை பெற்ற பிறகு, அவர் ரூபா. 150,000/= (ரூபா ஒன்றரை இலட்சம்) இலஞ்சம் கேட்டு, அங்கு மேலதிக சிகிச்சைக்காக ரூபா 300,000/= (ரூபா மூன்று இலட்சம்) இலஞ்சம் பெற்றார். அப்போதைய சிறைச்சாலை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தற்போது அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் பிரதி பணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்) டாக்டர் ரணசிங்க ஆராச்சிகே நயனஜித் ஹேமந்த ரணசிங்க, இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பிட்டகோட்டேயில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, 13.08.2025 அன்று காலை 7.45 மணியளவில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








