2015ஆம் ஆண்டில், பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகச் செயல்பட்டபோது, வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வணிக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளை, தானியங்களை தற்காலிகமாக சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 50 கிரேன்களை இலங்கை அரசு வணிக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்திலிருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் அறிமுகப்படுத்திய ஒரு நிறுவனம் மூலம் இறக்குமதி செய்து வாங்கத் தூண்டினார். பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், இதன் மூலம் நிறுவனத்திற்கு, அதாவது அரசாங்கத்திற்கு, 2015-2018 காலகட்டத்தில் ரூபா. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியதுடன் அந்தத் தொகையின் மதிப்புக்கு சமமான நன்மையினை வெளியாருக்கு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரான ஜயம்பதி சரித ரத்வத்த, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 04.11.2025 அன்று காலை 8.25 மணியளவில் கைது செய்யப்பட்டார்.








