இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நான்கு பேர் கைது

2020 ஆம் ஆண்டில், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தேவையற்ற சந்தர்ப்பத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2,000 கிலோ மீன்களை சேமிக்கும் திறன் கொண்ட ஒரு வெற்றிட பேக்கேஜிங் இயந்திரத்தை கொள்வனவு செய்தமையினால் அரசாங்கத்திற்கு ரூபா 5,856,116.00 இழப்பு ஏற்பட்டது. மேற்படி பாரிய இழப்பினை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியமையினால் பின்வருவோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2025.11.04 அன்று பிற்பகல் 2.30 மணியளவில்; இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்  விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

  • முன்னாள் தலைவர் களுவாடன வலவ்வே லலித் தௌலகல
  • நிர்வாக பணிப்பாளர் ரத்னவீர படபெந்திகே சந்தன கிருஷாந்த
  • விநியோக முகாமையாளர் குருந்துவ ஹேவகே விஜித் புஷ்பகுமார
  • செயற்பாட்டு முகாமையாளர்  (செயல்பாட்டு நிதி முகாமையாளர்) ஜயசுந்தர முதியன்சேலகே அனுர சந்திரசேன பண்டார

இதன் விளைவாக விநியோக நிறுவனமான வரையறுக்கப்பட்ட யூரோமெட் பூட்டெக் தனியார் நிறுவனத்திற்கு ரூபா 5,856,116.00 இழப்பு ஏற்பட்டது. மேற்படி குருந்துவ ஹேவகே விஜித் புஷ்பகுமார (விநியோக முகாமையாளர்) என்பவர், குறித்த நிறுவனத்திற்கு ரூபா. 928,058.20 தொகையில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு ஈடாக இலஞ்சம் கோரி தனது தனிப்பட்ட கணக்கிற்கு இலஞ்சமாக ரூ. 100,000.00 இனை பெற்றுக் கொண்ட  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search