இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராகப் பணியாற்றிய ஏ.ஏ.எம். ஹில்மி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு வெளிப்புற செயல்பாடுகளின் அடிப்படையில் பயிற்சி வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, 2024 ஜனவரியில் துளுகு ஹோல்டிங் நிறுவனத்திற்கு தொடர்புடைய விலைமனுக்கோரலை முறையற்ற முறையில் வழங்குவதன் மூலம் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல் மற்றும் சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2025.11.25 அன்று, கைது செய்யப்பட்டார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூபா. 5,301,200/= (ஐம்பத்து மூன்று இலட்சத்து ஆயிரத்து இருநூறு ரூபாய்) அரசாங்கப் பணத்தைப் பெறவும், இந்த வழக்கின் முதல் சந்தேக நபரான ஜி.எச்.டி. ஷான் யஹன்பத் அந்தப் பணத்தில் ரூ. 4,300,000/= ஐப் பெறவும் காரணமாக அமைந்தது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால மேற்படி தினத்தில் மு.ப 10:00 மணியளவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








