பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 124 ஐ மீறி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரியாக போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி Letter Pads களை தயாரித்து வந்த பாணந்துறை, கொரக்கபொல பகுதியைச் சேர்ந்த பனகொடகே ஸ்ரீ சதுர விமுக்தி பிரேமநாத் என்ற நபர், ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 03.12.2025 அன்று மாலை 6.58 மணியளவில் பாணந்துறை நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டார்.








