இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க, 2017-2018 ஆண்டுகளுக்கான எரிபொருள் கொள்வனவிற்கு திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால விலைமனுக்களை ரத்து செய்து, அதற்கு பதிலாக அதிக விலைக்கு உடனடி விலைமனுக்களை செயல்படுத்தியதன் மூலம் இலங்கை பெற்றோலியக்; கூட்டுத்தாபனத்திற்கு சுமார் ரூபா 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 15.12.2025 அன்று காலை 11.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








