இலங்கை மின்சார சபையின் 1400 சபரகமுவ மாகாண அதிகாரிகளை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்ட கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது நிகழ்ச்சி 2025 மே 21 அன்று மெனெரிபிட்டிய ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது, மேலும் மின்சார சபையின் சுமார் 110 சபரகமுவ மாகாண அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழவின் சார்பில் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி திருமதி உதேஷிகா ஜெயசேகர மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி திரு. ஷம்மி ஸ்ரீலால் ஆகியோர் ஆகியோர் விரிவுரைகளை முன்னெடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது மற்றும் அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் நேர்மைத்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















