பாராளுமன்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூன் 16, 2025 அன்று இலங்கை பாராளுமன்றத்தின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் சுமார் 200 பதவி நிலை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின், உதவி பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார, தகவல் உரிமை ஆணைக்குழுவின் , ஆணையாளர் திரு. ஜகத் லியனாராச்சி மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திருமதி விமுக்தி ஜெயசூரிய ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். இலஞ்சம், ஊழல், சட்டவிரோத சொத்து குவிப்பு மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தல், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது, ஊழல் மதிப்பீட்டுச் சுட்டி, நேர்மையின் திறன் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள் உள்ளிட்ட உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் நோக்கம், பொறுப்புக்கள் மற்றும் பணிகள் குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்ச்சித் திட்டம் வழங்கியது.























