கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதான அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் 2025 நவம்பர் 18 ஆம் திகதி அதன் தலைமை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவரின் தலைமையிலும், பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டுதலிலும் சுமார் 40 அதிகாரிகள் பங்கேற்றனர், அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அலுவலகங்களின் அதிகாரிகள் நிகழ்நிலை மூலம் இணைந்து கொண்டனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி ஜே.எல்.ஏ. உதேஷிகா மதுபாசானி மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. ஷம்மி ஸ்ரீலால் ஆகியோரால் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் மூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் என்றால் என்ன, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம், அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் நேர்மைத்திறன் மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.








