தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரணம் குறித்த நிகழ்ச்சித் திட்டம் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தியது. இந்த நிகழ்ச்சித் திட்டம் 2026 ஜனவரி 28 ஆம் திகதி அன்று தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் நிதியத்தின் தலைவர் உட்பட சுமார் 50 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி சாமோதி ஜெயசிங்க இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இலஞ்ச ஊழல் தடுப்பு, ஊழலின் விளைவுகள், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்ட விதிகள், நேர்மைத்திறன் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் பங்குபற்றுனர்களின் சந்தேக நிவர்த்திகளுக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








