இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொரல்லை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அலுவலர் ஒருவரை, பொது இடத்தில் மது அருந்தியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக ரூபா 2000.00 இனை முறைப்பாட்டளரடமிருந்து இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் 2019.11.08 ஆம் திகதி அன்று கைது செய்தனர்.
முறைப்பாட்டாளரின் பிள்ளையை தரம் 7 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் யாழ்ப்பாணம் இந்து ஆண்கள் கல்லூரியின் அதிபர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 50,000.00 இனை ஆரம்பத்தில் இலஞ்சமாக முறைப்பாட்டாளரிடமிருந்து பெற்றுக் கொண்ட நிலையில், எஞ்சிய ரூபா 50,000.00 இலஞ்சமாக முறைப்பாட்டாளரிடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று ஆணைக்குழுவின் உபாய அலுவலர் முன்னிலையில் பெற்றுக் கொண்ட நிலையில் மேற்படி பாடசாலையின் அதிபர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டாளரான பெண்மணியின் பிள்ளையை தரம் 8 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் முற்பணமாக ரூபா 10000.00 இனை கோரி அதில் ரூபா 8000.00 இனை சட்டவிரோதமாக இலஞ்சமாக முறைப்பாடடளரடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று பெற்றுக் கொண்ட நிலையில் மொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
வில்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு ஜெனரேட்டர் ஒன்று கணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடாத்தி சந்தேக நபர்களை கைது செய்யவும், குறித்த ஜெனரேட்டரை தேடிக் கொடுக்கவும் முறைப்பாட்டாளரிடமிருந்து வில்கமுவ பொலிஸ் நிலையத்தின் ஹந்துன்கமுவ காவல் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் காண்ஸ்டபல் ஒருவர் ரூபா 50,000.00 இனை இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த பொலிஸ் அலுவலரை கைது செய்தனர்.
முறைப்பாடடளரடரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்று தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கவும், முறைப்பாட்டாளரிடமிருந்து ஆவணங்களுடனான பயணப்பையை பொலிஸ் நிலைய பொறுப்பில் எடுத்து அதனை மீள ஒப்படைப்பதற்காக இலஞ்சமாக ரூபா 2000.00 இனை முறைப்பாடடளரடமிருந்து கோரி அப்பணத்தை 2019.07.21 அன்று பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த பொலிஸ் அலுவலரை கைது செய்தனர்.
ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 2019.07.11ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது குற்றஞ்சாட்டப்படடுள்ள ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் முறைப்பாட்டாளரான வலியமுனி தேவாலயாலகே சேனா ஆட்டிகலவிடமிருந்து ரூபா 300,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் பிரகாரம் லங்கா சதொச நிலையத்திற்கு விதிமுறைகளை பின்பற்றாது சுமார் 14,000 கரம்போர்ட் (Carom board) மற்றும் 11,000 டாம்போர்ட் (daam Board) முதலானவற்றை கொள்வனவு செய்தமை மற்றும் விளையாட்டுப் பொருட்களை விளையாட்டு அமைச்சிற்கு தொடர்பல்லாத செயற்பாடொன்றை மேற்கொள்வதற்காக ரூபா 53 மில்லியன்கள் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ ஆகியோருக்கு எதிராக 3 பேரடங்கிய 2 ஆம் இலக்க நீதாய மேல் நீதிமன்றில் HC/PTB/2/2/2019 எனும் வழக்கிலக்கத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனத்தை நடாத்தி வந்ததுடன், குறித்த நிறுவனத்தின் லீசிங் செய்யப்பட்ட வாகனங்களை தரித்து வைக்கும் கட்டத்திற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பினை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ஹோமாகம பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அலுவலர் ஒருவர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.06.20 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை மகாவலி அதிகார சபைக்குற்பட்ட வெஹரகல தென்ன பிரிவின் நாமல் கம பிரதேசத்தின் காணித்துண்டொன்றை முறைப்பாட்டாளரின் மகளின் பெயரிற்கு மாற்றிக் கொடுப்பதற்கு அவசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முறைப்பாட்டாளரிடம் ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலங்கை மகாவலி அதிகார சபையின் வெஹரகல தென்ன பிரிவின் போகஸ்வெவ பிரிவு முகாமையாளர் 2019.05.09 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அங்கத்தவர் என சந்தேகிக்கப்படுபவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தாக்கல் செய்யாது விடுதலை செய்து கொள்வதற்கு உதவிபுரியுமாறு கோரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 500,000.00 இனை இலஞ்சமாக வழங்குவதாக கூறி அதில் ரூபா 250,000.00இனை இலஞ்சமாக வழங்கிய போது, அப்பணத்தொகையை வழங்கிய நபரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954