இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தொழிலாளர் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தொழிலாளர் திணைக்கள அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 21-03-2025 அன்று தொழிலாளர் தினைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் சுமார் 150 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர்களான திருமதி விமுக்தி ஜயசூரிய> மற்றும் ஊழல் திருமதி மதுகா ருவந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். அதில் நேர்மைத்திறன், இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள், இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.