செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பரிசோதகர் (இன்ஸ்பெக்டர்) ஒருவர், முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்த நிலம் தொடர்பான சர்ச்சையைத் தீர்த்து வைப்பதற்கும், குறித்த நிலத்தில் அவசியமான நடவடிக்கைகளை எந்த தொந்தரவும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும் ரூபா 500,000/= (ஐந்து இலட்சத்தினை) 21.05.2025 அன்று மாலை 5.25 மணியளவில், புவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் வைத்து, முறைப்பாட்டாளரிடம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்ககுழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.