கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், திருமணமாகி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக தொடுத்த நஷ்டஈடு வழக்கு தொடர்பாக அவரது மனைவிக்கு எதிராக பிடியாணையை நிறைவேற்றி மனைவியை நீதிமன்றத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்வதற்காக பொலிஸ் அலுவலர் ரூ. 20,000/= (இருபதாயிரம் ரூபாய்) இலஞ்சம் கேட்டதாகவும், அந்தத் தொகையை வழங்கவில்லை என்றால், முறைப்பாட்டாளரை சில சட்டவிரோத செயல்களுக்காக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அதைச் செய்யாமல் இருக்க ரூபா 20,000/= இலஞ்சம் கோருவதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பொலிஸ் அலுவலர் 24.01.2025 அன்று மதியம் 1.22 மணியளவில் முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து குறித்த தொகையை கோரிப்பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கிரிபாவ பொலிஸ் சார்ஜன்ட் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.