முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றி வந்தபோது, தனது மனைவியிடமிருந்து லொத்தர் சபையின் பாவணைக்கு வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்களில் தலா ஒவ்வொரு வாகனத்திற்கும் உண்மையான வரி ரூபா 635000.00 ஆக இருந்த நிலையில், ரூபா 960,000.00 வீதம் முறையற்ற விதத்தில் வரி செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களினால் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதன் அடிப்படையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.