இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் அறிமுகம் தொடர்பில் 'மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத்தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட அரச அலுவலர்களுக்கான இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் அறிமுக பயிற்சி நெறியானது 2025.06.04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவு பணிப்பாளர் திருமதி எஸ். சிறிகாந்த் தலைமையில் நடைபெற்றது. மூன்று அமர்வுகளாக இரு தினங்களிலும் நடைபெற்ற இந்த நிகழ்சிசித்திட்டத்தின் மூலம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத்தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 185 அரச சேவையாளர்கள் பயனடைந்தனர்.