அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின்படி நில உரிமை தொடர்பான தகராறு தொடர்பாக பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் மீது அவருக்கு பாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு சட்டத்தரணி வாதிக்கு அறிவுறுத்தினார். அதன்படி பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்பு தொடர்பான முழு ஆவணத்தை பெற்றுக் கொள்ள முயன்ற வேளை அதனை வழங்குவதற்கு அரசாங்க கட்டணத்திற்கு மேலதிகமாக நீதிமன்ற அழைப்பாணை அதிகாரி ரூபா 5000.00 இனை கோரிப்பெற்றுக் கொண்ட போது 2025.06.05 அன்று மதியம் 12.23 மணிக்கு பலபிட்டிய நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குமுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.