இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பவுசர் சாரதி உதவியாளராக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, முறைப்பாட்டாளர் மற்றும் முறைப்பாட்டாளரின் நண்பரிடமிருந்து 02 தடவைகள் ரூபா 40,000/= உம் வங்கிக் கணக்கின் மூலம் ரூபா10,000/= உம் இலஞ்சம் கேட்டுப் பெற்ற தனியார் பாதுகாப்பு ஊழியர், 20.11.2025 அன்று காலை 11.30 மணியளவில் களனியின் பெத்தியகொட பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.







