ஓட்டமாவடியைச் சேர்ந்த முறைப்பாட்டாளரின் சட்டப்பூர்வ மனைவி, குழந்தைகளுக்கு பராமரிப்பு வழங்குமாறு கோரி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த பாராமரிப்பு வழக்கில் ஆஜராகி பாராமரிப்புத் தொகையை செலுத்தத்தவறியமையினால் முறைப்பாட்டாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்திலனால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த திறந்த பிடியாணை நகர்த்தல் பத்திரம் மூலம் நீக்கிக் கொள்ள காதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்பு வழக்குகள் தொடர்பான விரிவான அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை பெற்றுக் கொள்ள முனைந்த வேளை அதனை சமர்ப்பிக்க முறைப்பாட்டாளரிடம் ரூபா 5000.00 கோரிப்பெற்றுக் கொண்ட நிலையில் சந்தேக நபரான வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) பகுதி மற்றும் பொலன்னறுவை (பதில் கடமை) புரியும் காதி நீpதிபதி 17.02.2026 அன்று, இலக்கம் 21, அக்பர் பள்ளிவாசல் வீதி, வாழைச்சேனை 05 இல் உள்ள காதி நீதிபதி அலுவலகத்தில வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்







