மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் அவருக்கு உதவி செய்த இரு இடைத்தரகர்களும் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் 10.11.2023 அன்று கைது செய்யப்பட்டனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் அவருக்கு உதவி செய்த இரு இடைத்தரகர்களும் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் 10.11.2023 அன்று கைது செய்யப்பட்டனர்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொரான பிரிவு வன அலுவலகத்தில் கடமையாற்றும் பிரிவு வன அலுவலகர் 50000.00 ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் 2023.11.09ம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் 25.08.2023 ஆம் திகதி பதவிய பிரதேச செயலகத்தின் குடியேற்ற அதிகாரியை கைது செய்தனர். பதவிய, ஸ்ரீபுர பகுதியை சேர்ந்த முறைப்பாட்டாளருக்கு சொந்தமான சுவர்ணபூமி பத்திரத்தை முறைப்பாட்டாளரின் உறவினருக்கு மாற்றிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு 25000.00 ரூபாயை இலஞ்சமாக பெறுகையில் குடியேற்ற அதிகாரியின் காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, இலஞ்சமாக பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் மருதானை பொலிஸ் நிலைய சூழல் பிரிவின் பொறுப்பதிகாரி (உதவி ஆய்வாளர்) 2023.07.20ம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்தில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அகில இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கடமையாற்றிவந்த (சிரேஷ்ட டெப்போ பரிசோதகர்) ஒருவர் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் 2023.06.12 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய
சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய , சபுகஸ்கந்த காவல்துறை நிலையத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவரை 100,000 ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 02.06.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் அக்டோபர் 2003 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 14 டிசம்பர் 2005 ஆம் திகதி முப்பது நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் குறித்த சமவாயம் நடைமுறைக்கு வந்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொரளை தெற்கு கிராம சேவகர் பிரிவின் கிராம
உத்தியோகத்தரை ரூ 50,000/- ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 23.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நுவரெலியாவில் வசிக்கும் தரகர் ஒருவரை 5000/-. ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 20.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் கல்முனை பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் நிலைய பொறுப்பதிகாரியை 200/- ரூ இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 08.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கதிர்காமம் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் தனமல்வில பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் பீட் வன உத்தியோகத்தர் ஒருவரை 185,000/- ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2023.02.15 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தாளர் ஒருவரை ரூ 21,000/- இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2023.02.15 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954