பனாமுர பகுதியில் வசிக்கும் ஒரு பாரம்பரிய வைத்தியர் அளித்த முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளருக்கு ஆயுர்வேத மருத்துவ சபையினால் வழங்கப்படும் பாரம்பரிய மருத்துவர் என்ற சான்றிதழை அந்தத் துறையின் ஆணையாளரின் ஒப்புதலுடன் பெற்றுத் தர உதவி ஒத்தாசை புரிவதாக கூறி களனி பகுதியில் வசிக்கும் ஒரு நபர், பிலிமதலாவ பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் மற்றும் நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் ஒரு அரசு சாரா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து ரூபா 10 இலட்சத்தினை இலஞ்சமாக கோரி அதில் 500000.00 இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்டதுடன் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மேற்படி மூன்று நபர்கள் 2025.03.22 ஆம் திகதி மு.ப. 11.55 மணியளவில் சினமன் கிரேண்ட் ஹோட்டலில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.