இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குமு (CIABOC), ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து, மே 14, 15, 16 மற்றும் 21, 2025 ஆகிய திதிகளில், உள்ளக அலுவல்கள் பிரிவுகளை ((IAUs) நிறுவுதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் மதிப்பீடு (AIA) ஆகியவற்றில் கவனம் செலுத்தி மேற்படி பயிற்சிப்பட்டறையை வெற்றிகரமாக நடாத்தியது.
இந்தத் தொடரின் முதல் பயிற்சிப்பட்டறை மே 14 ஆம் திகதி காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஹோட்டல் ரமடாவில் நடைபெற்றது, இந்த பயிறசிப் பட்டறையில் 24 அமைச்சுக்களைச் சேர்ந்த பிரதானிகள் மற்றும் நேர்மைத்திறன் அதிகாரிகள் உட்பட 60 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பயிற்சிப் பட்டறைகள் மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஹோட்டல் ரமடாவில் நடைபெற்றது, இந்த பயிற்சிப் பட்டறைகளில் 44 திணைக்களங்களைச் சேர்ந்த பிரதானிகள் மற்றும் நேர்மை அதிகாரிகள் உட்பட 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தொடரின் இறுதிப் பயிற்சிப் பட்டறை மே 21 ஆம் திகதி காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஹோட்டல் ரடிசனில் நடைபெற்றது, இந்தப் பயிற்சிப் பட்டறையில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் மாகாண சபைகளைச் சேர்ந்த பிரதானிகள் மற்றும் நேர்மைத்திறன் அதிகாரிகள் உட்பட 113 பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்தனர்.
CIABOC இன் பணிப்பாளர் நாயகம் திரு. ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்கவின் பிரதான உரையுடன் அனைத்துப் பயிற்சிப் பட்டறைகளும் தொடங்கியது, அவர் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் நிறுவனப் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். முதல் அமர்வில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திருமதி சந்திமா விக்ரமசிங்க, (IAUs க்களை நிறுவுவதற்கான கட்டமைப்பின் கண்ணோட்டத்தையும், தேசிய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளுடன் அவற்றின் சீரமைப்பையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, சட்டத்தரணி திரு. ஜகத் லியன ஆராச்சி, IAU-க்களின் கடமைகளை கோடிட்டுக் காட்டினார் மற்றும் ஊழல் அபாய நேர்வுகளின் மதிப்பீடு (CRA) செயல்முறை மற்றும் ஊசுயு- அடிப்படையிலான நிறுவன செயல் திட்டங்களின் மேம்பாடு குறித்து பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்தினார். களனி பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. தரிந்து வீரசிங்க, நிறுவன ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது குறித்த ஒரு அமர்வை நிகழ்த்தினார், பொது நிறுவனங்களுக்குள் நெறிமுறைகள் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் IAU-க்களின் பங்கை எடுத்துக்காட்டினார். பிற்பகல் அமர்வுகள் AIA பைலட் திட்டத்தில் கவனம் செலுத்தின, முPஆபு-ஐச் சேர்ந்த திரு. ஜகத் பெரேராவுடன். KPMG இன் மேலும் அமர்வு யுஐயு மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் சுய மதிப்பீட்டு முறை குறித்து ஆராய்ந்தது. இதைத் தொடர்ந்து, AIA நிறுவன செயல் திட்ட இறுதிப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அமர்வு நடைபெற்றது. அடுத்து, ஊழல் எதிர்ப்பு நிபுணர் டாக்டர் இந்திகா பெரேரா மற்றும் KPMG யைச் சேர்ந்த திரு. சஞ்சீவி பண்டாரா ஆகியோர் AIA மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் சுய மதிப்பீட்டு முறை குறித்த ஒரு அமர்வை வழங்கினர்.
இறுதி அமர்வு, பங்கேற்பாளர்கள் ஒரு ஊடாடும் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான ஒரு திறந்த தளத்தை வழங்கியது, அங்கு CIABOC இன் பணிப்பாளர் நாயகம் IAU-க்களின் நடைமுறை செயல்படுத்தல் மற்றும் AIA செயல்முறை தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்தேற்புக்களை முன்வைத்தார்.
CIABOC இன் பிரதி பணிப்பாளர் நாயகம் திருமதி சுபாஷினி சிறிவர்தனவின் நிறைவுக் குறிப்புக்கள் நிறுவன நேர்மைத்திறன் மற்றும் பயனுள்ள ஊழல் எதிர்ப்பு செயல்படுத்தலுக்கான உத்தேச வரைபடம் முதலானவற்றை வலியுறுத்துதாய் அமைந்தன.