இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் அறிமுகம் தொடர்பில் 'மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத்தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட அரச அலுவலர்களுக்கான இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் அறிமுக பயிற்சி நெறியானது 2025.06.04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவு பணிப்பாளர் திருமதி எஸ். சிறிகாந்த் தலைமையில் நடைபெற்றது. மூன்று அமர்வுகளாக இரு தினங்களிலும் நடைபெற்ற இந்த நிகழ்சிசித்திட்டத்தின் மூலம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத்தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 185 அரச சேவையாளர்கள் பயனடைந்தனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம், ஊழலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், நேர்மைத்திறன் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விடயக்கற்கைகளுடனான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் உருவாக்கம், நோக்கம், எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
'மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரு நாள் நிகழ்ச்சித்திட்டத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் சட்டத்தரணி சால்தீன் எம். சப்ரி மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். எம். எம். சப்வான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.