இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் புதிய அறிவூட்டல் முயற்சியின் ஒரு பகுதியாக முதல் நிகழ்வாக ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு கடந்த மார்ச் 04 ஆம் திகதி நடாத்தியது. மேற்படி நிகழ்வில் அரசுக்குச் சொந்தமான போக்குவரத்து சேவை வழங்குநரின் நிறைவேற்றுத்தர அலுவலர்களுக்கான விழுமியம் சார் நிர்வாகம் குறித்த தெளிவூட்டலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த நிகழ்வில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC). ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான சம்பத் ஆராச்சிகே மற்றும் ஷிலாமேகா வெலிதொட்டகே ஆகியோரின் விரிவுரைகள் இடம்பெற்றன. ஊழல் தடுப்பு உத்திகள், சட்ட பின்புலம் மற்றும் இலஞ்சம் மற்றும் தவறான நடத்தை தொடர்பான விடய ஆய்வுகளின் அடிப்படையில் விரிவுரைகள் முன்னெடுக்கப்பட்டன.
1958 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ளுடுவுடீ (முதலில் சிலோன் போக்குவரத்து சபை, (CTB) என பெயரிடப்பட்டிருந்தது) தீவளாவிய போக்குவரத்து சேவைகளை வழங்கும் பிரதான அரச நிறுவனமாகும்.
1979 ஆம் ஆண்டில் பெயர் மாற்றப்பட்ட (SLTB) குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கான மானிய சேவைகள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் அணுகக்கூடிய மற்றும் சாதாரண கட்டணத்தில் போக்குவரத்து சேவையினை வழங்குகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டமானது பொது சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் SLTB -யின் பரந்த ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பரீட்சார்த்த முயற்சியின் ஆரம்பமாகும். போக்குவரத்துத் துறையில் விழுமிய சீர்திருத்தங்களுக்கான நிறுவன ரீதியான ஆதரவை பிரதிபலிக்கும் வகையில், கொழும்பு தலைமையகத்தைச் சேர்ந்த அனைத்து நிறைவேற்று அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.