மீரிகம பிரதேச சபை அழைப்பின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மீரிகம பிரதேச சபையின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை கடந்த 19-03-2025 அன்று மீரிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடாத்தியது. இதில் சுமார் 70 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திரு. சம்மி ஸ்ரீலால் கலந்து சிறப்பித்ததுடன் நேர்மைத்திறன்> இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள்> இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.