நேர்மையான அரச சேவையின் உருவாக்கத்திற்காக அரசாங்க அலுவலர்களை விழிப்பூட்டி நடாத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று மாத்தறை மாநகர சபையின் 50 உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 24.02.2025 அன்று மாத்தறை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள், இலஞ்சம் மற்றும் ஊழல் சட்ட அறிமுகம், அரச அலுவலர்களாக இலஞ்சம் மற்றும் ஊழலிற்கு எதிராக செயற்படல்> இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து முறைப்பாடு அளிக்கும் முறைகள், இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு உத்தியோகத்தர் திரு.ஷம்மி ஸ்ரீலால் தொட்டவத்த மற்றும் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி உதேஷிகா ஜயசேகர ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர் மாநகர ஆணையாளர் மற்றும் பிரதி மாநகர ஆணையாளர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.