நேர்மையான தேசமொன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான இன்னுமொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கொழும்பு மாநகர சபை அதிகாரிகளை மையப்படுத்தி 2024.02.15 அன்று நடைபெற்றது.
நேர்மையான தேசமொன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான இன்னுமொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கொழும்பு மாநகர சபை அதிகாரிகளை மையப்படுத்தி 2024.02.15 அன்று நடைபெற்றது.
ஊழல் எதிர்ப்பு தொடர்பான வெற்றிகரமான ஸ்டிக்கர் பிரச்சாரத்தின் காரணமாக முறைப்பாடுகளில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் “இலஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மாணவத்தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் இன்னும் இரண்டு நிகழ்வுகள் புத்தளம் ஆணமடுவ மாதிரி பாடசாலை, ஆணமடுவ மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100 பேர் மற்றும் பொலன்னறுவை ரோயல் கல்லூரி, சீவலி மகா வித்தியாலயம், விலயாய மத்திய மகா வித்தியாலயம், ஆனந்த மகளிர் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100 பேரிற்கும் நடாத்தப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் “இலஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மாணவத்தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறையிம் அடுத்த கட்ட நிகழ்வுகள் பதுள்ளை தர்மதூத வித்தியாலயம், விஹாரமஹாதேவி மகளிர் வித்தியாலயம், சுஜாதா மஹா வித்தியாலயம், ஊவ மஹா வித்தியாலயம், தம்மானந்த மஹா வித்தியாலயம், உதயராஜ மஹா வித்தியாலயம், விஷாகா மகளிர் மஹா வித்தியாலயம் மற்றும் ராஹ{ல மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கும் அனுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் தேசிய பாடசாலை, வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர மஹா வித்தியாலயம், நிவந்தக சேதிய மஹா வித்தியாலயம், மிகிந்தலை மஹா வித்தியாலயம், தலாவ மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கும், குருனாகல் வயம்ப ரோயல் கல்லூரி, ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம், கொதலாவல மஹா வித்தியாலயம், லக்தாஸ் வித்தியாலயம், நிஸ்ஸங்க மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கும் நடத்தப்பட்டன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் புதிதாக பதவியேற்ற உதவி ஆணையாளர்கள் 57 பேருக்கு 2024 ஜனவரி 19ம் திகதி அறிவுறுத்தல் நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டது. இங்கு புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவும், ஊழலுக்கெதிரான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும், நேர்மைத்திறனான அரச சேவை தொடர்பாகவும் மற்றும் அரச ஊழியர்களின் பொறுப்புக்களும் கடமைகளும் தொடர்பாகவும் விடய கற்கைகள் மற்றும் நடைமுறை செயற்பாடுகளைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது. இந்நிகழ்வின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர் (சட்டம்) திருமதி. ஆமா விஜேசிங்ஹ மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளான உதேஷிகா ஜயசேகர, மதூகா ருவன்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிட்டம்புவ சரிபுத்ரா தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்விசார் ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் 75 பிக்கு மாணவர்களுக்கான ஓர் ஊழல் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் 2023 ஒக்டோபர் 31 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954