இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜூன் 26, 2025 அன்று ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறப்பு கலந்துரையாடலை நடத்தியது. இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்த்துப் போராடுதல், நேர்மைத்திறனை நிலைநாட்டுதல் குறித்து பல்கலைக்கழக சமூகத்திற்கு கல்வியூட்டல் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான விஷயங்களைப் பற்றி இந்த பயனுள்ள கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இது ஆணைக்குழவின் சிறிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.







