கொழும்பு மாநகர சபை (CMC) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இணைந்து, 2025 பெப்ரவரி 08 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு மாநகர சபையின் நிறைவேற்றுத்தர அலுவலர்களுக்காக நேர்மைத்திறனை வலுப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி;திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. தூய்மை, நெறிமுறை நிர்வாகம் மற்றும் பொது பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக கௌரவ ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமான தூய்மையான இலங்கை விஷேட வாரத்தின் (Clean Sri Lanka Initiative Week) ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.