ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால்  முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த 10.04.2025 அன்று ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின்படி, தொடர்புடைய விசாரணை நிகழ்வுகளுக்கும்  அவருடைய கருத்துக்களுக்கும்  பிணைப்பு இருப்பதனை ஆணைக்குழு தனது அவதானத்திற்குற்படுத்தியுள்ளது.

எனவே, தொடர்புடைய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் வாக்குமூலமொன்றினை பதிவு செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 49 (1) இன் படி, 17.04.2025 அன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search