இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் ரூபா 100,000.00 (ஒரு இலட்சம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை-வவுனியா வழித்தடத்தில் இயக்கப்படும் திருகோணமலை டிப்போவிற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வாளர்கள் சரிபார்த்த போது, பயணி ஒருவருக்கு டிக்கெட்டினை வழங்காமை தொடர்பில் பேருந்தின் நடத்துனராகப் பணியாற்றிய முறைப்பாட்டாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இருப்பினும், சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரிஇ முறைப்பாட்டாளருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணையை முடித்துஇ மீண்டும் பணியில் அமர்த்த 100,000 ரூபாயை இலஞ்சமாக கோரியுள்ளார். பின்னர் சந்தேக நபர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி மூலம் பணத்தை கோரி பெற்றுள்ளார்.
அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தில் பணிபுரியும் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் 2025.04.22 பிற்பகல் 2.50 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யம் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.