விளையாட்டு அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு விநியோகிப்பதற்கு என்ற உள்நோக்கத்துடன்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, லங்கா சதொச நிறுவனம் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட 14,000 கரம் பலகைகள் மற்றும் 11,000 டாம் பலகைகளை ஆளும் கட்சியின் கட்சி அலுவலகங்களுக்கு விநியோகி;ததமை மூலம் 'ஊழல்' குற்றத்தைப் புரிந்தமைக்ககாக அப்போதைய முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, லங்கா சதோசவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதாய நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு 2025.05.29 அன்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதன்படி, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் லங்கா சதோச தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் தலா 100,000.00(ஒரு இலட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழவின் உதவி பணிப்பாளர் நாயகம் திருமதி அனுத்தரா ஜயசிங்க மற்றும் உதவி பணிப்பாளர் நாயகம் திருமதி துஷாரி தயாரத்ன ஆகியோர் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜராகினர்.