சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்துதல் – 2025 ( ஓய்விற்கு பின்னரான வெளிப்படுத்துகை)

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், சட்டத்தின பகுதி II இன் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்துவதற்கான மத்திய அதிகார சபையாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி> புதிய சட்டத்தின் கீழ் மத்தியமயப்படுத்தப்பட்ட இலத்திரனியல் சமர்ப்பிப்பு முறை மூலம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வெளிப்படுத்தல் மற்றும் செவ்வைபார்ப்பு செயல்படுத்தப்படும் வரை> அச்சிடப்பட்ட வடிவத்தில் (வன்பிரதியாக) சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல்களை சமர்ப்பிக்க ஆணைக்குழு அனுமதி வுழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் சட்டத்தின் துணைப் பிரிவுகள் 82 (1)> (2) மற்றும் (3) இல் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் அது குறித்த விதிமுறைகளால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படிவம் 20.03.2025 திகதியிடப்பட்ட இல 2428/43 என்ற அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி, சுற்றுநிருபம், டிஜிட்டல் படிவம், அதை நிரப்புவதற்கான செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தொடர்புடைய இணைப்புகள் ஏற்கனவே ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.ciaboc.gov.lk/declaration-of-assets-v/circular) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 31.03.2025 திகதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய ' ஓய்விற்கு பின்னரான வெளிப்படுத்துகையை' சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து நபர்களும் 30.06.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் தாங்கள் இறுதியாக பணிபுரிந்த நிறுவனத் தலைவர்களிடம் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் நிறுவனத் தலைவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தொடர்புடைய இணைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்களை நிரப்புவதன் மூலம் அத்தகைய பிரகடனங்கள் மற்றும் தகவல்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலதிமாக, நிறுவனத் தலைவர்கள் மேலே உள்ள பிரிவு 80 இல் குறிப்பிடப்பட்டுள்ள 15.09.2023 க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஒவ்வொரு உத்தியோகத்தர்களிடமிருந்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஓய்வுக்குப் பின்னரான வெளிப்படுத்தல்களைப் பெறல் வேண்டும், அதே நேரத்தில், 2025 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியத்திற்குப் பின்னரான வெளிப்படுத்தல்கள் 30.06.2025 க்குள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தல்களைப் சமர்ப்பித்த மற்றும் சமர்ப்பிக்காத உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் 01.07.2025 அன்று ஆணைக்குழுவிற்கு விஜயம் மேற்கொண்டு அல்லது மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வழங்கப்பட்ட காலவரையறைக்குள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிக்கத் தவறும் உத்தியோகத்தர்கள் மீது சட்டத்தின் பிரிவு 90 இன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search