பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரொருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

எத்திமலை பிரதேசத்தில் தான் செய்த குற்றத்திற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கு 5000 ரூபாயை இலஞ்சமாhக வழங்கிய படல்கும்புர தொடன்கஹதுரல பிரதீப் உபுல் குமார எனும் நபருக்குஇ அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து 2024.08.26 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

குறித்த குற்றவாளி 6 கிலோ கஞ்சாவை தன் கையிருப்பில் வைத்திருத்தல் மற்றும் கஞ்சா பயிரிடுதல் போன்ற குற்றங்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக அரச உத்தியோகத்தரான பொலிஸ் ஆய்வாளர் எச்.பீ.சரத் குமார என்பவருக்கு அன்பளிப்பாக 5000 ரூபாயை வழங்கியமை மூலம் இலஞ்சக் குற்றம் ஒன்றில் ஈடுபட்டமை காரணமாகவே அவருக்கெதிராக குற்றப்பத்;;திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வனைத்துக் குற்றங்களையூம் குற்றவாளி ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மேல் நீதிமன்றம் அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்ததோடுஇ அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் 3 மாத மேலதிக சிறைத்தண்டனையூம் விதிக்கப்பட்டது. மேலும்இ இலஞ்சமாக வழங்கப்பட்ட தொகையை அரசுடைமையாக்கவூம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் முறைப்பாடு சார்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி அசித அந்தனி அவர்கள் தோன்றி விடயங்களை தௌpவூபடுத்தினார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search