பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரொருவர் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டமை.

கைது செய்யப்படட நபர் வெல்லவாய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தன்னுடைய இரத்த மாதிரியை மாற்றுவதற்காக ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குறித்த நபரின் இரத்த மாதிரியை அரசபகுப்பாய்வாளருக்கு அனுப்பி, டி. என். ஏ பரிசோதணை மூலம் குழந்தையொன்றின் தந்தைமையை உறுதி செய்வதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சந்தர்பத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் ஏலவே நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது இரத்த மாதிரியை ஏலவே வழங்கியிருந்த நிலையில் அதனை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப ஏற்பாடாகி இருந்த சந்தர்பத்தில், தன்னுடைய இரத்தமாதிரிக்கு பதிலாக வேறொருவரின் இரத்த மாதிரியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ரூபா 90000.00 இனை இலஞ்சமாக வழங்கிய சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  சுற்றிவளைப்புப் பிரிவின்  அதிகாரிகளால்  குறித்த நபர்  மொனராகலை மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து 2019.03.07 கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search