சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உள்ளூர் தரநிலைகளுக்கு இணங்காத சேதன உரத் தொகுதிக்கு பணம் செலுத்திய குற்றச்சாட்டில், 2021 ஆம் ஆண்டு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 19.05.2025 அன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், நீதவானின் உத்தரவின் பேரில் 2025.05.26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.