ரூபா 1,500,000.00 (ரூபா பதினைந்து இலட்சம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டார்

நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருந்த வியாபார உரிமம் தொடர்பான விண்ணப்பம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபார உரிமத்தினை வழங்குவதற்கு ஆவண செய்வதற்கு வேறு இரு நபர்களுக்கு ரூபா 2,000,000 (ரூபா 20 இலட்சம்) இனை இலஞ்சமாக வழங்குமாறு கோரியமை மற்றும் ரூபா 1,500,000 (ரூபா 15 இலட்சம் ) இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் 2025.03.25 அன்று பி;.ப 1.20 மணியளவில்> இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 2025.04.01 வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார;.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search