2021 ஆம் ஆண்டில் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற சேதன உர தொகுதியின் இருப்பு தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட கடன் பத்திரங்களைத் திறக்க அறிவுறுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு தேவையற்ற இழப்பை அதாவது முதல் இருப்பில் 75% அதாவது சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி அரசாங்கத்திற்கு இழப்பினை ஏற்படுத்தியமைக்காக> விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மகேஷ் கம்மம்பில அவர்கள், ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் வைத்து 2025.04.28 அன்று கைது செய்யப்பட்டார்.