வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அத்துகோரல டொன் உதேனி பிரியங்க குறிப்பிட்ட பகுதியில் விற்பனைக்கு நிலத்தை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியது தொடர்பாகவும், முறைப்பாட்டாளரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் ரூ.5,480,000/= (ஐம்பத்து நான்கு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய்) பணத்தை பெற்றுக் கொண்டதுடன், அவரது வீட்டின் முற்றத்தில் இன்டர்லொக் கல்லை பதித்த ஒப்பந்ததார நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1,250,000/= (பன்னிரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயினை முறைப்பாட்டாளர் மூலமாக செலுத்த திட்டமிட்டமை முதலான இலஞ்ச குற்றச் சாட்டின்பேரில் வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அத்துகோரல டொன் உதேனி பிரியங்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் 09.05.2025 அன்று காலை 09.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.