முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

அக்குறணை பிரதேச செயலாளராக பணி புரிந்த முஹம்மட் ஹனீபா முஹம்மட் நியாஸ் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்க அவர்கள்   5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் குற்றப்பணமாக ரூபா 50000.00 மற்றும் தண்டப்பணமாக ரூபா 5000.00 மும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேற்படி தண்டனையானது 2012 ஆம் ஆண்டில் அசங்க ரணவக என்பவருக்கு சொந்தமான கல் உடைக்கும் வேலைத்தளத்தை நடாத்திச் செல்வதற்கு பிரதேச சபையினால் விநியோகிக்கப்படும் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும், அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவா நிறைவாக ரூபா 50000.00 இனை கோரிப்பெற்றுக் கொண்டமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப்புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் மேற்படி வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே வழக்கின் 2 வது குற்றவாளியான எம். ஏ. ஏ. அலி என்பவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டார்.

முறைப்பாட்டாளரின் சார்பில் மேற்படி வழக்கானது ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் திரு அசித அந்தோனி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search