மேல் நீதிமன்றத்தினால் ரூபா 1.5 மில்லியன் அரசுடமையாக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதியினால் இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் HCB 2158/16 வழக்கில் குற்றத்தினை ஒப்புக் கொண்ட இரு குற்றவாளிகளுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்னை விதிக்கப்பட்;டு அது 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் தண்டப்பணமாக தலா ரூபா 10000.00 விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜரான உதவிப்பணிப்பாளர் நாயகம் (சட்டம்) திரு அசித அந்தோனி குற்றவியல் நடவடிக்கை கோவை பிரிவு 77 இன் பிரகாரம் மேற்படி இலஞ்சம் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட 1.5 மில்லியன் ரூபாவினை அரசுடமையாக்குமாறு மேற்கொண்ட வேண்டுகோளின் அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மேற்படி 1.5 மில்லியன் ரூபாவினை அரசுடமையாக்கினார்.

மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 1 வது குற்றவாளி வத்தளை நகர சபையின் முன்னாள் உப நகர முதல்வாhக பணி புரிந்த T. முஹம்மட் ரிசான் என்பவராவார். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது இலஞ்சமாக 4 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு இணங்கி அதில் 1.5 மில்லியன் ரூபாவினை சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொசான் சஞ்சீவ என்பவருக்கு வழங்குவதற்கு சதி செய்தமை மற்றும் வழங்கியமையுடன் தொடர்புடையதாகும்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search