ரூபா 3000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய பொலிஸ் அலுவலர்கள் மூவரினை கைது செய்தமை

ரூபா 3000.00 இனை இலஞ்சமாக பெற்ற பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் 3 பொலிஸ் அலுவலர்களினை  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2017.12.14 ஆம் திகதிகைது செய்தனர்.

மோட்டார் வாகன விபத்து தொடர்பில் பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தினால்  பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின்  நீதிமன்ற அலுவல்களுக்கு பொறுப்பான பொலிஸ் அலுவலரின் மூலம் ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரி ரூபா 2000.00 ஆரம்பத்தில் பெற்றுக் கொண்ட நிலையில்  எஞ்சிய ரூபா 3000.00 இனை மற்றும் இரு பொலிஸ் அலுவலர்கள்மூலம் கேட்டு பெற்றுக் கொண்ட நிலையில் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சந்தேக நபர்கள் பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவில் கைது செய்யப்பட்டதுடன்>மேலதிக விசாரணையின் பின்பு குருநாகல் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு2017.12.20 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search