மாவனல்ல பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சாரதி ஆகியோர் 2 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்கல்

2023.01.13 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய 2 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மாவனல்ல பிரதேச சபையின் தவிசாளரையும் மற்றும் அங்கு கடமையாற்றும் சாரதி ஒருவரையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாவனல்ல நகர எல்லைக்குள் அமைந்துள்ள முறைப்பாட்டாளருக்கு சொந்தமான காணி ஒன்றின் ஒரு பகுதியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வரைபடத்தை அங்கீகரிப்பதற்கும் கையொப்பமிடுவதற்கும் மேற்குறிப்பிட்ட தவிசாளர் 2 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.

சந்தேகநபர் மாவனல்ல சீதா உணவகத்தின் மாடியில் வைத்து 20 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டு குறித்த பணத்தை உணவகத்திலிருந்து மாவனல்ல பிரதேச சபையில் கடமையாற்றும் சாரதி ஒருவரின் ஊடாக வெளியாள் கொண்டுசெல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search