ரூ 350,000/- இலஞ்சம் பெற்ற காவல்துறை சார்ஜன்ட் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மதவாச்சி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை 350,000/- ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 2023.01.31 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மற்ற தரப்பினருடன் பேச்சுவார்த்தை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை முறைப்பாட்டாளருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு தொடர்பில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து முறைப்பாட்டாளரை விடுவிப்பதற்கும், மேற்படி வழக்குகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கு அமைய அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதைத் தவிப்பதற்காகவும் ரூ 350,000/- இலஞ்சம் பெற்ற போதே சந்தேகநபர் மதவாச்சி,கொனகம்புக்கொல்லாவ யில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search