ரூ. 22,000 இலஞ்சம் பெற்ற 4 நபர்கள் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய ரூ. 22,000/- இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கட்டிடத் திணைக்களத்தில் கடமையாற்றும் ஆரம்பநிலை அரை-தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரையும், குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2023.02.16 ஆம் திகதி கைது செய்துள்ளனர். மற்றும் லொத்தர் விற்பனையாளர்ஒருவரும், யாட்டல் சிம் விற்பனையாளர் ஒருவரும் மேற்குறிப்பிட்ட இலஞ்சத்தை பெறுவதற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தில் இணையவழி முறையில் முன் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்காமல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கு இலஞ்சம் கோரிய சந்தேக நபர்களில் ஒருவரான ஆரம்பநிலை அரை- தொழில்நுட்ப உத்தியோகத்தர் பத்தரமுல்லை இலங்கை வங்கிக்கு முன்பாக வைத்து 22,000/- ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். மற்ற சந்தேக நபரான அலுவலக உதவியாளர் குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search