மருதானை பொலிஸ் நிலைய சூழல் பிரிவின் பொறுப்பதிகாரி 10,000.00 (பத்தாயிரம்) ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, இலஞ்சமாக பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் மருதானை பொலிஸ் நிலைய சூழல் பிரிவின் பொறுப்பதிகாரி (உதவி ஆய்வாளர்) 2023.07.20ம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளர் குளியாபிட்டி மாவட்ட நீதிமன்றத்தில் வாகன விபத்தொன்று சம்பந்தமாக தொடுத்திருந்த இழப்பீட்டு வழக்கிற்கு சாட்சி அளிப்பதற்காக பெற்றுக் கொள்ள முடியுமான பிரயாண செலவுத் தொகையான 2000.00 ரூபாவிற்கு மேலதிகமாக, முறைப்பாட்டாளருக்கு சாதகமாக சாட்சி அளிப்பதாக கூறி 10,000.00 (பத்தாயிரம்) ரூபாயை இலஞ்சமாக கோரி பெற முற்படுகையில் குளியாபிட்டி மாவட்ட நீதிமன்றத்தின் அருகே கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search