5000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற வான்எல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டுக்களில் கைது

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ குறித்த நபரால் செலுத்தப்பட்டு வந்து அவரது சகோதரியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அவருக்கு அறியத்தராமல் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட்இ அந்த மோட்டார் சைக்கிளை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தவிருப்பதாகவூம்இ அவ்வாறு செய்யாதிருப்பதற்கு 5000 ரூபாயை இலஞ்சமாகவூம் கேட்டுள்ளதுடன் குறித்த பணத்தை வழங்கும் வரை மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை தன்வசம் வைத்துக்கொண்டுள்ளார். எனவே குறித்த ஆவணங்களை மீள வழங்குவதற்காகவூம்இ மோட்டார் சைக்கிளை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தாமல் இருப்பதற்காகவூம் 5000 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் வான்எல பொலிஸ் நிலையத்தின் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் 2024.07.17 அன்று மாலை 7.21 அளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search